கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை காணவில்லை!அரசியல்வாதிகள் காட்டம்; மக்கள் கொதிப்பு.


ரசவலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு செயலகமும் 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் நீக்கப்பட்டு இருக்கிறது.

இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலைகளை தோற்றுவித்திருக்கின்றன.

இது தொடர்பாக உணர்வுள்ள சில அரசியல்வாதிகள் வழமைபோல காட்டமான அறிக்கைகளை வெளியிட்டவண்ண மிருக்கின்றனர்.
மக்களும் வழமைபோல ஆக்ரோஷமாக கருத்துக்களை வெளியிட்டு கொதிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணை செயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் வாய்திறந்துள்ளனர்.

கலையரசன் எம்பி.

அரச வலைத்தளத்தில் இருந்து எமது பாரம்பரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக எமது தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ..

இந்த விடயம் மேலும் மேலும் கல்முனை தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களையும் புண்பட செய்திருக்கின்றது. மாறாக கொதிப்படையை செய்திருக்கின்றது. ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு இன்னும் இன்னும் இந்த வேற்றுமை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்ற அந்த கயவர்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் அதே பாணியிலேயே செயல்பட நிர்பந்திக்கப்படுவோம்.

நாங்கள் எவ்வளவுதான் ஒற்றுமையாக வாழ வேண்டும் ஐக்கிய மகா சமாதானமாக வாழ வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்த போதிலும் தொடர்ச்சியாக சில இனவாதிகள் அதனை அலட்சியம் செய்து வருவது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது என நினைக்கின்றேன். எனவே இந்த விடயத்தில் உரிய சம்பந்தப்பட்டவர்களோடு பேசி கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். என்னிடம் கல்முனையை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இது தொடர்பாக தொடர்ச்சியாக ஆத்திரத்தோடு முறையிட்டு வருகின்றார்கள் . பலர் நேரடியாக வந்து தமது கண்டனங்களை உணர்ச்சி வசப்பட்டு தெரிவிக்கின்றார்கள்.
இதனை இன்னும் இன்னும் நீங்களும் உங்கள் கட்சியும் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்? என ஆக்ரோஷமாக கேட்கிறார்கள்.
எனவே இதனை சாதாரணமாக நான் எடுத்துக் கொள்ள முடியாது .எனது கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்றேன். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

தவிசாளர் ஜெயசிறில்..





கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணி பதிவக உரிமை மறுக்கப்பட்டது.அதேவேளை இவ்வாரம் அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ?
இவ்வாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்..

1993 ஆண்டு முதல் முழு அதிகாரத்தோடும் இயங்கி வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வர்த்தமானி அறிவித்தல் இல்லை என கூறி துண்டாக துண்டாக கூறுபோட்டு வருகின்றார்கள்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தி க்கு இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் இல்லை. ஆனால் சுயாதீனமாக இயங்குகின்றது.
ஆனால் இன்று 29 கிராம சேவகர் பிரிவையும் உள்ளடக்கி செயல்படும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தன்மையை இல்லாதொழிக்க மிகத் தீவிரமாக இனவாத அரசியல்வாதிகளும் இனவாத அமைப்புக்களும் செய்கின்றன.இதற்கு அரச அதிகாரிகளும் துணை செல்கின்றனரா?
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணி பதிவக உரிமை மறுக்கப்பட்டது.அதேவேளை இன்று அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ?

அதேவேளை ஒன்றைச் சிந்திக்க வேண்டும் உப பிரதேச செயகலமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கு இலக்கமிடப்பட்டு அவை அமைச்சின் அரச வலைத்தளத்தில் காட்டப்படுகின்றது. இது அரச கட்டமைப்பில் இனவாத அரசியல் தலையீட்டின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். பாகுபாட்டுடன் தொடர்ந்து கல்முனை மக்கள் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்படுமானால் இன நல்லிணக்கம் என்ற சொல்லை தேடிச் செல்ல வேண்டி நிலை ஏற்படும். கல்முனை மக்களின் மனநிலை மிக கொதிப்படைந்துள்ளது. விரைவில் இதற்கான முடிவு ஒன்றினை பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன்




கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன் அதிகாரத்தை உபயோகிக்க முட்டுக்கட்டை இடும் நபர்கள் வடகிழக்கு இணைய இணங்குவார்கள் என்பது தமிழ்த் தேசிய கட்சிகளின் பகல் கனவே ஆகும்.


இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ. நிதான்சன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்..
வடகிழக்கு இணைப்பு எனும் நோக்கோடு சிறுபான்மை சமூகமாக ஒன்றிணைய வேண்டும் எனவும் அதன் ஊடாக தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமை என்று எல்லாம் தமிழ் தலைவர்கள் பேச தவில் அடிப்பது போன்று கிழக்கில் தமிழர் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றர்.

1993 ஆண்டு முதல் முழு அதிகாரத்தோடும் இயங்கி வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வர்த்தமானி இல்லை என கூறி துண்டாக துண்டாக சிதைக்கின்றனர்.மூன்று தசாப்தத்திற்கு மேல் இன்று பிரதேச செயலகம் எனும் நிர்வாக அலகின் அதிகாரம் முழுமையாக இன்னொரு பிரதேச செயலகத்தின் வரம்பு மீறிய செயலால் பாதிக்கப்பட்டு வருகின்றது.காரணம் கேட்டால் பிரதேச செயலகம் எனும் வர்த்தமானி இல்லை என கூறுகின்றனர்.

குறிப்பாக கோறளைப்பற்று மத்திக்கு இதுவரையில் பிரதேச செயலகத்துக்கு வர்த்தமானி இல்லை ஆனால் சுயாதீனமாக இயங்குகின்றது.ஆனால் இன்று 29கிராம சேவகர் பிரிவையும் உள்ளடக்கி செயல்படும் பிரதேச செயலகத்தின் சுயாதீன தன்மையை இல்லாதொழிக்க மிகத் தீவிரமாக இனவாத அரசியல்வாதிகளும் இனவாத அமைப்புக்களும் செய்கின்றன.இதற்கு அரச அதிகாரிகளும் துணை செல்கின்றனரா?

நேற்று முன் தினம் அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ? அதேவேளை ஒன்றைச் சிந்திக்க வேண்டும் உப பிரதேச செயகலமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கு இலக்கமிடப்பட்டு அவை அமைச்சின் அரச வலைத்தளத்தில் காட்டப்படுகின்றது. இது அரச கட்டமைப்பில் இனவாத அரசியல் தலையீட்டின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். பாகுபாட்டுடன் தொடர்ந்து கல்முனை மக்கள் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்படுமானால் இன நல்லிணக்கம் என்ற சொல்லை தேடிச் செல்ல வேண்டி நிலை ஏற்படும். கல்முனை மக்களின் மனநிலை மிக கொதிப்படைந்துள்ளது. விரைவில் முடிவு ஒன்றினை பெற நாம் ஒற்றுமையாக வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

மேலும் இவ்வாறு இம்சை தரு நடவடிக்கைகளுக்கு இறுதி முடிவு எட்ப்படும் காலம் விரைவில் என்பதனை இனவாத அரசியல்வாதிகள் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்காக மட்டுமே குரல் கொடுத்து வருகின்றது.ஆனால் இனவாதம் தலைதூக்க இனி ஒரு போதும் இடமளியோம்.


வி.ரி.சகாதேவராஜா-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :