ஆதம்லெவ்வை நியாஸ் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்



ட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆதம்லெவ்வை நியாஸ் சட்டத்தரணியாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராகவும் பணியாற்றி வருகின்றார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் (சமூகவியல்) விசேட பட்டத்தினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தினையும் பெற்றுள்ள இவர், பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இவர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ.எல்.ஆதம்லெவ்வை, எம்.கதீஜா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :