கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில் திஹாரிய அல் அஸ்ஹர் மற்றும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணிகள் சம்பியன்




ரிஹ்மி ஹக்கீம், கம்பஹா மாவட்ட நிருபர்-
ம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நேற்றைய தினம் (03) ஆரம்பமான கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணியும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணியும் சம்பியன் பட்டத்தை தமதாக்கிக்கொண்டன.

நேற்று (03) இடம்பெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணி, வெயாங்கொட மத்திய கல்லூரி அணியை 8 - 7 என்ற பெனல்டி கோல் அடிப்படையில் வீழ்த்தி சம்பியனாக தெரிவானது.

இன்று (04) இடம்பெற்ற 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவின் இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி, மயூரபாத வித்தியாலய அணியை 4 : 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :