கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் வழிகாட்டலில், தஃவா குழு ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 28.08.2022 (ஞாயிற்றுக் கிழமை) காலை 8.30 மணிக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாம், கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக் கும் பொருட்டே நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழுவினரின் முழுமையான பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்விற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், கல்முனை இராணுவ படை முகாம் 18வது விஜயபாகு பாபல ரஜிமேந்து ஒப்பிசர் கொமாண்டர் எஸ். ஆர்.கே.டி.சிறிசேன மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான முகாமில் கல்முனை மாநகர பிரதேச வாழ் ஆண்கள்; பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பதோடு, மேலதிக விபரங்களைப் பெற தஃவா குழுவினரின் 0760123242, 0771336317 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் பெயர் விபரங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :