ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி சாய்ந்தமருதிலும் கண்டன ஆர்ப்பாட்டம்



எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து அவரை விடுதலை செய்யக் கோரி இன்றும் நாடு பூராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை இடைவேளை நேரத்தில் ஆசிரியர்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

அந்த வகையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஆசிரியர்களால் இன்று காலை 10.30 தொடக்கம் 10.45 வரை பாடசாலை முன்றலில் ஜோசப் ஸ்டாலினினை விடுதலை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அல்-ஜலால் வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் கல்முனைக்கான இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :