ஒவ்வொரு மாவட்டத்திற்குமான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஆரம்பம்.



சகல விதமான நாற்பட்ட நோய்களுக்கான நிரந்தர தீர்வு என்கிறார் ஹோமியோபதி விஷேட வைத்தியர் Dr. ஜெம்சித்.
ஹோமியோபதி மருத்துவ துறையில் புரட்சிகரமான சேவையினை நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஹோமியோபதி விஷேட வைத்தியர் Dr. ஜெம்சித் தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமென இலங்கை ஹோமியோபதி மருத்துவ சபையினால் தெரிவு செய்யப்பட்ட மருத்துவர்களால் அவர்களின் பிரத்யேக மருத்துவ நிலையங்களில் வைத்து நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் மாதத்தில் இரண்டு தடவைகள் குறித்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் நோயாளர்கள் தத்தமது மாவட்டத்திலோ அல்லது தமக்கு அண்மையிலுள்ள விரும்பிய மாவட்டங்களில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமிற்கான தினத்தினை அறிந்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதாக வைத்தியர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :