கல்முனை மைமுனா அரபுக் கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா !



நூருல் ஹுதா உமர்-
டந்த 2018 இல் கல்முனை கிறீன்பீல்ட் வீட்டத்திட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மைமுனா அரபுக் கலாபீடத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (19) மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்திலே இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு முன்னிலை அதிதியாக கல்முனை மைமுனா அரபு கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ.எல்.நாசர் அவர்களும், நிகழ்வுக்கு தலைமையாக மைமுனா அரபு கலாபீடத்தின் தலைவர் என். எம்.நௌஷாட் அவர்களும், நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபர் கண்ணியத்துக்குரிய உலமா ஏ.சி.எம் சுபைர் அவர்களும் கலந்து கொண்டனர்.

எட்டு மாணவிகள் “மைமூனிய்யா ஆலிமா” பட்டம்பெற்று கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் டாக்டர் கே.எம்.ஏ. அஸீஸ், உட்பட முக்கிய உலமாக்களும், புத்திஜீவிகளும், வர்த்தகப் பிரமுகர்களும் கல்விமான்களும் ஊடகவியலாளர்களும் பட்டம் பெரும் ஆலிமாக்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :