கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான முகாம்



எம்.என்.எம். அப்ராஸ்,ஏ.எல்.எம்.ஷினாஸ் நூருள் ஹுதா உமர்,எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (28) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததானமுகாம்,கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்ததட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் பொருட்டு ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தஃவாகுழுவினரின் முழுமையான பங்களிப்புடன்,
அஷ்-ஷெய்க் ஸாபித் (ஸரயி, றியாதி) அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த இரத்த தான முகாம் ஆரம்பநிகழ்வில்,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைவைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரகுமான்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி, கல்முனை பொலிஸ் நிலைய சமூகபாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட்,
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.எம்.றிஸ்மியா,கல்முனை பொலிஸ் நிலைய சமூகபாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.பி.எம்.அமான்,கல்முனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.
குமார உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த இரத்ததான முகாமில் கல்முனை மாநகர பிரதேச வாழ் ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், விளையாட்டு
க்கழகங்களின்உறுப்பினர்கள்,,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம்வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :