பிரதேச சபைகளுக்கான குடிநீர் விநியோகிக்கும் பவுசர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானினால் கையளிக்கப்பட்டது.



பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினூடாக 15 மாவட்டங்களில் இயங்குகின்ற 35 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் தூரநோக்கு சிந்தனையில் 490 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் விநியோகிக்கும் பவுசர் வழங்கும் நிகழ்வு நேற்று (25) மாண்புமிகு பிரதமரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கும் வெங்கள செட்டிகுளம் பிரதேச சபைக்கும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளுக்கான குடிநீர் விநியோகிக்கும் பவுசரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் அந்தந்த பிரதேச சபை தவிசாளர்களுக்கு கையளித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :