அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
ற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 112 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இதற்காக அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தின் தலைவர் பெரியநாயகி சிவராஜ், செயலாளர் சுகதேவ் வேலாயுதம், பொருளாளர் நடனசபேசன் முருகானந்தம், பாலமுருகன் சம்பந்தம், தினேஸ் கந்தசாமி, வசந்த் வல்வில் ஓரி, விஜயகுமார் மனோகரன் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தனர். இதனை நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் ப்ரண்ஷிப் பௌண்டஷன் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :