தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு!





பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை - புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் ஆண்டாங்குள விவசாயிகளுக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பசளைகளை பிரிதொரு பிரதேசத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த செயற்பாட்டை குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்தி பசளைகளை ஆண்டாங்குள விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

புல்மோட்டை கமநல சேவை நிலையத்தினால் இந்த விடயம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து கொண்ட ஆண்டாங்குள விவசாயிகள் குறித்த விடயத்தை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு ஆண்டங்குள விவசாயிகளின் நிலமையை தெளிவுபடுத்திய பின்னர் மாவட்ட கமநல உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக ஆண்டாங்குள விவசாயிகளுக்கு உரிய பசளைகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னெடுத்த தவிசாளருக்கு ஆண்டாங்குள விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :