திருகோணமலையில் PEACE செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு.



ஹஸ்பர்-
க்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் செயலமர்வொன்று கிண்ணியா விஷன் மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது.
PEACE எனும் இப்புதிய செயற்திட்டம் சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கான மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தல்
People’s Engagement and Action For Civic Empowerment(PEACE) எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 20 சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயக மற்றும் அபிவிருத்தி துறையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம பிரதான விருந்தினராகவும், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. அத்தநாயக்க, நிறுவனத்தின் தலைவர் ரஸீனா சாலே, பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் வளவாளராக திரு. சுஜீவன் சித்ரவேல் மற்றும் அவரது உதவியாளர் திரு. மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த 20 சிவில் சமூக அமைப்புகளைக் கொன்ட திருகோணமலை சிவில் மன்றம்(Trinco Civic Forum) உருவாக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :