445 வது லங்கா சதோச நிலையம் கேகாலை மாவட்டத்தில் நெலும்தெனியவில்



நுகர்வோருக்கான சிறப்பானதும் உயர்தரமானதுமான சேவையினை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் இலங்கையின் 445 வது லங்கா சதோச நிலையமானது #கேகாலை மாவட்டத்தில் #நெலும்தெனிய எனும் இடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ #காதர் #மஸ்தான் அவர்களினால் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இது கேகாலை மாவட்டத்தில் 18 வது லங்கா சதோச நிலையமாக விளங்குகின்றது.

குறித்த லங்கா சதோச நிலைய திறப்பு விழா நிகழ்வில் கேகாலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ ரசிக்க விக்ரமசிங்ஹ, லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர், வரகாப்பொல மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :