மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரிக்கு கல்முனை மாநகர சபையில் இறுதி அஞ்சலி



அஸ்லம் எஸ்.மௌலானா-
காலம்சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் பூதவுடல் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று ஞாயிறு (18-09-2022) காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை மாநகர சபையின் சபா மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகர சபையில் நேற்று சனிக்கிழமை மாலை, மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :