திருகோணமலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பாதுகாப்பதற்கு சரியான தலைமைத்துவமோ அமைப்போ இருப்பது துரதிஷ்டவசமே



ஹஸ்பர்-
திருகோணமலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பாதுகாப்பதற்கு சரியான தலைமைத்துவமோ அமைப்போ இருப்பது துரதிஷ்டவசமே என தமிழர் பேரவை அமைப்பின் புதிய அங்குரார்ப்பண வைபவம் திருகோணமலையில் நேற்று (23)இடம் பெற்ற போதே அதன் செயற்பாட்டாளர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண வைபவம் 15 செயற்பாட்டாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இதன் போது ஊடகங்களுக்கு கூட்டாக அதன் செயற்பாட்டாளர்கள் கோரிக்கையை முன்வைத்தனர் தமிழ் மக்களுடைய பல பிரச்சினைகள் இங்கு உள்ளது காணி கல்வி சமூகம் கலை கலாசாரம் வரலாறு போன்றன இதனை ஒரே குரலில் வெளிக்கொண்டு வருவதற்காக இந்த பேரவையை உருவாக்கியுள்ளோம் இதற்காக அனைவரும் ஒரே குரலில் ஒன்றினைந்து இன மத முரண்பாடுகளற்ற வகையில் உரிமைகளை பாதுகாக்க பல நடவடிக்கைகளில் செயற்படவுள்ளோம். நாளாந்தம் எமது சமூகம் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது இதற்கான தீர்வு திட்டமொன்றை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது மக்களுடைய பிரச்சினைகளை நாமே முன்னின்று பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :