அக்கரைப்பற்றில் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ப்ஸோ தன்னார்வு அமைப்பின் அனுசரணையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட "திருமணத்திற்கு முந்திய ஆலோசனை மற்றும் வாழ்க்கைத் திறன்கள் பற்றிய திறன் விருத்தி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.
எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கப்ஸோ தன்னார்வு அமைப்பின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாத் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இப்பயிற்சி நெறி சுமார் 16 தலைப்புகளில் 3 மாதகாலமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :