கொழும்பில் இனிய நந்தவனத்தின் வெள்ளி விழா மலர் அறிமுகம்



னிய நந்தவனம் இலங்கை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்துள்ள நந்தவனத்தின் வெள்ளி விழா மலர் அறிமுகம் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகருமான
புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வீரகேசரி நாளிதழ்,வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன்,தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
கே.ஆர்.பி. ஹரன்,தினகரன் நாளிதழ், வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் ரி.செந்தில் வேலவர், வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியர் ரொபட் அன்டனி, தினக்குரல் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் த. சிவகணேசன், கெளரவ அதிதிகளாக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா, எழுத்தாளர் முருகன் சிவலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நூலின் முதல் பிரதியை மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் எழுத்தாளர் முனைவர் சதீஸ்குமர் சிவலிங்கம் பெற்றுக் கொண்டார். தலைமையுரையை ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரனும் நூலாய்வுரையை ரஞ்சனி சுப்பிர மணியமும் ஏற்புரையை இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனும் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :