பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு



நூருல் ஹுதா உமர்-
சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் புதன்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம். மன்சூர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை ஊடகப் பிரிவின் பொறுப்பாசிரியர் ஆர்.மனோகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இச் செயலமர்வில் பாடசாலை ஊடகப் பிரிவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச ஊடக செயலமர்வு ஸ்கை தமிழ் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான ஷிஹானா நௌபர் இனால் நடாத்தி வைக்கப்பட்டது. செயலமர்வின் இணைப்பு வேலைகளை துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் சிவபாலன் கற்பஹாசினி மேற்கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :