சிறப்பாக நடைபெற்ற அட்டப்பள்ளம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்.



வி.ரி.சகாதேவராஜா-
நிந்தவூர் ,அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ச மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை சிறப்பாக நடாத்தினார்கள்.
ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்னோடியாக ,சனி, ஞாயிறு தினங்களில் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுஇடம் பெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை இடம்பெற்றது.
திங்கட்கிழமை காலை 6 .54 மணி முதல் 7. 31 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம் பெற்றது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தற்போது மண்டல அபிஷேக பூசைகள் நடைபெறுகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :