கிழக்கு மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தொடர்ச்சியாக சம்பியன்களாக தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண கல்வி திணைக்கனத்தினால் 2022யிற்கான பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட பெரு விளையாட்டு போட்டிகள் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இதில் ஒரு அங்கமாக சதுரங்க (Chess) போட்டி அண்மையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில்
நடைபெற்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி தொடர்ச்சியாக முதலாம் இடத்தைப்பெற்று சம்பியனாகவும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டதோடு தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் தனிதிறமைக்கான (Board Champion) தெரிவில் 20வயதிற்குட்பட்ட பிரிவில் ஏ.எச்.எம்.ஏ.சிமாம், எம்.எச்.எம் நுஸ்ரத் மற்றும் எம்.ஏ.ஏ..அத்தீப் ஆகிய மாணவர்களும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் எம்.ஏ..தமீம், எம்.இஸட்.எம்.சனீப் ஆகிய மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :