இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் "கரம் கொடுப்போம்" நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் சேவை நாடிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.
"கரம் கொடுப்போம்" வேலைத்திட்டமானது, தன்னார்வ தனவந்தவர்களின் நிதிப் பங்களிப்போடு பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
பிரசவத்திற்கு தேவையான பொருட்களும் மருத்துவச் செலவுக்கான காசோலையும் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படும் இவ் கரம் கொடுப்போம் நிகழ்வில் பிரிவில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment