கல்முனை ஸாஹிரா ஓடினெறியன் பிரிமியர் லீக் சாம்பியன் கிண்ணத்தை கிரே கலக்ஸி அணி சுவீகரித்தது.





அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர பகுதியினால் வகுப்புகளுக்கு இடையிலான ஓடினெறியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

10. க.பொ.த.சாதாரண தர பிரிவு வகுப்புகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபீர் பிரதம அதிதியாகவும்
பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், பகுதித் தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிரதி பகுதி தலைவர் எம்.பி. மஹ்ரூப், உதவி பகுதி தலைவர் ஏ.எல்.எம். ராயிஸ் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி சுற்றுப் போட்டியில் கிரே கலக்ஸி அணி Grey galaxy அணி வெற்றி பெற்று ஓடினெறியன் பிரிமியர் லீக் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சிரேஷ்ட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :