கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசாங்கள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - இம்ரான் எம் பி



எப்.முபாரக்-
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசாங்கள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - இம்ரான் எம் பி நாடாளுமன்றில் வேண்டுகோள்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுவந்த நீர்க்கட்டணங்களை இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதே போன்று மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபா 1200/- வழங்கப்படுகிறது. வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகள் கஸ்டத்தை எதிர்கொள்வதாகவும் இந்த கட்டணங்களை அரசாங்கங்கம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பா உ இம்ரான் மகரூப் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான அவரது உரையின் போது அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ்களுக்கு QR முறையை ஊடாக 50 லீட்டர் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் அதேபோன்று ஆட்டோகளுக்கும் 5 லீட்டர் போதாமையால் இந்த நிலைமையினை கருத்திற்கொண்டு அம்பியூலன்ஸ், ஆட்டோகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :