யானை தாக்கி இளம் தாய் மரணம்! கரடியனாறு பொலிஸ் பிரிவு பெரிய புல்லுமலையில் சம்பவம்!!



ஏறாவூர் சாதிக் அகமட்-
சென்ற 28/08 அன்று , பெரிய புல்லுமலையிலிருந்து கோப்பாவெளி முதலாம் கட்டையிலுள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நவரெட்ணம் புஸ்பவதி (42) என்ற இளம் தாய், வெலுக்காக்கண்டி குளத்தோரமாக பயணிக்கும்போது பாதை வளைவிலுள்ள காட்டுக்குள் நின்ற யானையின் தாக்குதலுக்குள்ளானதால் , தூக்கி வீசப்பட்ட இவர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போது , சிகிச்சை பலனின்றி இன்று (01/09) அதிகாலை மரணமானார்.

கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தகவலினடிப்படையில் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளித்தார்.

மேலும் , யானையின் தாக்குலால் விலா என்புகள் உடைந்து உள்ளக இரத்தக்கசிவு ஏற்பட்டு இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்திருப்பதாக பிரேத பரிசோதனையின்போது தெரியவந்ததாக, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :