ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பம்



எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர்-
ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ”ஸஹிரியன் பழைய நண்பர்கள் சம்மேளனத்தின் ஏற்ப்பாட்டில் இடம் பெறும் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் நாளை (21) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஸாஹிரா தேசியக் கல்லூரி பாடசாலை பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 29 அணிகள் பங்கு கொள்ளும் 07 ஓவர்கள் கொண்ட குறித்த கிரிக்கெட் போட்டியானது கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெறவுள்ள ஆரம்ப நிகழ்வில்,கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும்,கெளரவ அதிதியாக கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அவர்களும்,விசேட அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக்,சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (21)ஆரம்பமாகும் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை 24 வரை இறுதி போட்டியுடன் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 நிறைவடையவுள்ளது .

மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :