காரைதீவு 12இல் டெங்கு பரவல் தீவிரம்.! சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா அதிரடி தடுப்பு நடவடிக்கை!



காரைதீவு சகா-
காரைதீவு 12 ஆம் பிரிவில் அண்மைக்காலமாக டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவிவருகிறது.

அதனைத் தொடர்ந்து,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் விசேட டெங்கு தடுப்பு பணிகளும்,கிணறுகளில் மீன்கள் விடும் பணிகளும் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ,அலுவலக சுகாதார பணியாளர்கள் வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.
அங்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

>இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம்.

>ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும்.

>ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு நுளம்பு வலை இடல், நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள். மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் பின் வரும் இடங்களில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன,

1)குளிர்சாதனப் பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள்.

2)சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள்.

3)கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள்.

4)குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள்.

5)நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள்.

எனவே மேற்குறிப்பிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டது.


சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது


இந்நிகழ்வில் அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்,பொது சுகாதார பரிசோதகர்கள்,நுளம்பு களத்தடுப்பு பிரிவினர்கள்,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக நுளம்பு கள தடுப்புப் பிரிவினர்களும்,காரைதீவு 12 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர்,காரைதீவு பிரதேச சபை ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :