பிரபல கவிஞரும் , எழுத்தாளரும் ,சமூக ஆர்வலருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏறாவூர் தாஹிர் (அஹமட் லெப்பை) அவர்களது
" முழுமதி நபிகள்" என்ற தலைப்பிலான கவிதை நூல் இன்று ஏறாவூர் வாவிக்கரை கலாசார மண்டபத்தில் ஏறாவூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் சாமசிறி தேசமான்ய, தேச கீர்த்தி அல்ஹாஜ் MSM நஸீர் தலைமையில் நடைபெற்றது.
கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக கவி வடிவில் வடித்திருக்கும் இக் கையடக்க நூலானது அனைவராலும் வாசிக்கப்பவேண்டியதே.
இந் நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் MS. நழீம் ,பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஸ்ஷெய்த் அலிஷாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MS. சுபைர் , காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் MSM. ஜாபிர், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் AL மர்சூக், வரலாற்றில் ஓர் ஏடு புகழ் அல்ஹாஜ் MHM புஹாரி மௌலவி ஆகியோருடன் பல் துறை சார் அதிகாரிகள் ,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நூலாசிரியரின் உறவுகள் நட்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நூலின் நயவுரையை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் அல்ஹாஜ் MHM புஹாரி மௌலவி அவர்களால் நடாத்தப்பட , ஏற்புரையை நூலாசிரியர் வழங்கியதோடு, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலாசிரியரால் முழுமதி நபிகள் பற்றிய கையடக்க நூலும் கையளிக்கப்பட்டதுடன் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானாவினால் நூலாசிரியருக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்ட பின்னர் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.
0 comments :
Post a Comment