மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இறுதிநாள் வாணி விழாவும், ஏடு தொடங்கி வைப்பு நிகழ்வும்!



பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரி விழாவின் இறுதிநாள் விழாவும், ஏடு தொடங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (05) மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் ச.நேசராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

திருகோணமலை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சாந்தமூர்த்தி குருக்களினால் இறுநாள்
நவராத்திரியின் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து, மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் ச.நேசராஜா மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்
மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் ஆகியோரினால் ஏடு தொடங்கி வைக்கப்பட்டு, அச்சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின்போது, இரட்ணம் சஞ்சு சியாமலி் சகோதரிகளின் வீணை இசையும், திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலய மாணவர்களின் நடனமும் நிகழ்ச்சியும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதில் திணைக்களத்தின் காலாச்சார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :