பாரம்பரிய ஆக்கத்திறன் கண்காட்சி



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்கள் இடம் பெறுகின்றது.

மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பி.முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர், பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி.எம்.ஜே.றிப்கா, வீ.ரீ.அஜ்மீர், திருமதி.ஜே.தாஜூன் நிஸா, ஆரம்பக்கல்வி வளவாளர் எம்.பி.நபீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மீராவோடை பொது நூலகத்தின் பகுதி, போக்குவரத்து பகுதி, பாரம்பரிய உணவு, பாரம்பரிய பொருட்கள், இஸ்லாமிய கலைக் கூடம், சித்திரக் கலைகள் உட்பட பாரம்பரியங்களை மீட்டுப் பார்க்கும் வகையில் கண்காட்சிக் கூடம் அமையப்பெற்றுள்ளது.

காலம் மாறி வரும் நிலையில் பாரம்பரிய உணவுகள், கலாசாரம், பொருட்கள் என்பன மருகி வரும் நிலையில் மாணவர்கள் முதல் தற்காலத்து சந்ததியினரின் பாரம்பரியவற்றை பார்க்கும் வகையிலும், பாரம்பரியம் அழியாத வகையிலும் கண்காட்சியில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு காணப்பட்டது.

அத்தோடு அம்மியில் அரைத்தல், உரலில் அவல் குற்றும் பழக்கம் இல்லாது காணப்பட்ட நிலையில் அதனை முதியோர்கள் பயன்படுத்தி காட்டிய நிலையில் மாணவர்கள் முதல் பலர் அதனை பயன்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :