நாவிதன்வெளி தேசிய கல்லூரியில் வாணி விழா !



காரைதீவு சகா-
ம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த நாமகள் விழா நேற்று(4) செவ்வாய்க்கிழமை அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக சமுக சேவையாளர் இந்திரன் ரூபசாந்தன் கலந்து கொண்டார். மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.

பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் ஏற்பாட்டில் உதவி அதிபர் என்.வன்னிய சிங்கம் சிரேஸ்ட ஆசிரியர் என். கோடீஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரதம அதிதி வேதசகா ஆன்மீக நூல்களை பரிசளித்தார். இறுதியில் விஷேட பூசை இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :