புறோ நைட் செஸ் அகடமியின் கிழக்கு மாகாண சதுரங்க போட்டி !



நூருல் ஹுதா உமர்-
புறோ நைட் செஸ் அகடமி ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி இன்று (24) சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் ஸாக்கிர் அஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளராக இருந்த றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டதுடன் பெற்றோர்கள் சார்பாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் எம்.ஐ. நபார், திடீர் மரண விசாரணை அதிகாரி அல் ஜவாஹிர் உள்ளிட்ட பல கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :