கடல் மணலைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறையும்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



கடல் மணலைச் சுத்தப்படுத்தி கட்டுமாணத் துறையில் அதன் பயன்பாட்டை விரைவுபடுத்துமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்...
கடல் மணலைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறையும்...
மக்களுக்கு மானிய விலையில் தர நிர்ணயத்திற்கு ஏற்ற கடல் மணலை வழங்க திட்டம்...

கர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக முத்துராஜவெல மணல் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கடல் மணலை நிர்மாணத் தொழிலில் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான 10-15 கிலோமீற்றர் தொலைவில் கடலில் இருந்து நிலத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப்பட உள்ளது.

கடலில் இருந்து பம்ப் செய்யப்படும் மணலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து மணல் மேடாக திறந்த வெளியில் சேமித்து மணல் இயந்திரத்தில் நுழைத்து துவைத்து, சுத்தம் செய்து தேர்வு செய்து உலர்த்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்.

உப்பு நீங்கும் வரை கடல் மணல் கழுவி சுத்தம் செய்து உலர்த்தப்பட்டு, பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை தர நிர்ணய பணியகத்தின் SLS1397:2010 தரத்தின்படி தயாரிக்கப்படும். அதன் பின்னர் கெரவலப்பிட்டிய - முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் கடல் மணல் விற்பனை செய்யப்படும்.

மிகவும் உயர்தரமான கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கடல் மணலைப் பெறுவதற்கு முன்னர் கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை, நாரா நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை போன்ற நிறுவனங்களிடமிருந்தும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட வேண்டும்.
தற்போது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதால் இது தொடர்பான கண்காணிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடல் கொந்தளிக்கும் காலம் முடிந்து அடுத்த வருடம் மணல் அகழ்வை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை நில மீட்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :