தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் !



நூருல் ஹுதா உமர்-
லக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்ட கோமாரி ,உல்லே ஆகிய பிரதேச மக்களுக்கு தொற்றா நோய்கள் சம்பந்தமான பரிசோதனைகளை முன்கூட்டியே மேற்கொண்டு நோய்களை தடுப்பதற்கான கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமையை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்டு இன்று விரிவுரையும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும், கிராம அலுவலர்களும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியும், கோமாரி மற்றும் உல்லே ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும், திட்டமிடல் கிளையின் PSSP நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தரான ஏ.றஸ்ஸாலிம் மற்றும் பாசித் முகைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :