காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க சாய்ந்தமருது விவசாய விஸ்தரிப்பு நிலைய சுற்று மதிலுக்கு மின்சார வேலி



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் அலுவலகத்தின் சுற்றுமதில் அண்மையில் காட்டு யானையின் தாக்கத்திற்குள்ளாகி சேதமடைந்த நிலையில் அம்மதில் தற்போது மீண்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்குள் தொடர்ச்சியாக உள் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள மரங்கள் , பயிர்கள் , குடியிருப்புகள் என்பவற்றை சேதப்படுத்தி செல்லும் போது சாய்ந்தமருது விவசாய விஸ்தரிப்பு நிலையத்தின் மதிலையும் பதம்பார்த்துச் செல்லுவது வழமையானதொன்றாகும்.
இதனால் தற்போது மதிலுக்கு வெளிப்புறமாக மின்சார வேலி ( யானை வேலி ) அமைக்கப்பட்டுள்ளதனால் காட்டு யானைகளின் தொல்லை சற்று குறைந்துள்ளதாக சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :