அன்னமலை பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதி திறந்து வைப்பு.



நூருள் ஹுதா உமர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்குரிய வைத்தியர்கள்  விடுதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம் பீ ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் சீ எம் மாஹிர், அன்னமலை பிரதேச வைத்திய சாலையின்  அபிவிருத்தி குழுவினர், பிராந்திய மருந்தாளர் திருமதி இந்திரகுமார், சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் குழுவினரும் PSSP செற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்ற வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சேவைகளுக்கான கட்டிட தொகுதியை பார்வையிட்டதுடன் அதன் மீளாய்வு பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.

குறித்த குழுவினருடன் கலந்தாலோசனையில் ஈடுபட்ட பணிப்பாளர் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு குறித்த வைத்தியசாலைக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் பணிப்பாளரின் பாரபட்சமின்றிய சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பிரதிப் பணிப்பாளர் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி மீது கொண்டுள்ள ஆர்வத்தையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :