மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு


பாறூக் சிஹான்-
ருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வும் அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி தின நிகழ்வும் மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான ஜெஸ்மி எம்.மூஸா நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியும் மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் முன்னிலை அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது சிறுவர் தின நினைவுப் பரிசில்கள், ஆங்கில மொழியில் அதி திறமை காட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள், வகுப்புக்களில் பல்வேறு நிலைகளில் துலங்கிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கலை நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கல் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

மேற்குறித்த நிகழ்வில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஜீ.ஜீ.ஜெயலால், கேலிஸ் விவசாய நிறுவன உதவி முகாமையாளர் ஏ.எஸ்.எம்.றிஸ்வர், பறக்கட் டெக்ஸ் நிறுவன நிதி முகாமையாளர் எம்.எஸ்.எம்.சித்தீக் அஸீம் ,அபாயா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் , றாடோ நகையக பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சஹ்மி, ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர், அல் மனார் தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.மிஹ்ளார் கல்முனை பிரதேச சிறுவர் மேம்பாட்டு அதிகாரி எம்.எஸ்.எம்.சாஜித், சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஸ்பியா வீவி அல் மனார் தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.மிஹ்ளார் உட்படப் பலரும் கலந்து கொணடனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :