ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வு


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றி வரும் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் என்.தனஞ்சயன், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி லசந்த பண்டார, ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மத், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.சீ.நியாஸ், இளம் சமுகசேவையாளரும் ஹயா இன்ரனஸனல் கலக்ஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது அதிதிகள் மற்றும் சமூக நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேஷ வேலைத் திட்டத்தின் கீழ்
ஊடகவியலாளர்களுக்கு இவ் ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15 பேருக்கு நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் தியாகி அறக்கொடை நிதியத்தினால்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :