பண்ணிசை ,பரதநாட்டியம் உள்ளிட்ட ஆறு கலைப்பயிற்சி நெறிகளுக்கு வித்தியாரம்பம்.



வி.ரி.சகாதேவராஜா-
ந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்திய நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று வித்தியாரம்பம் சிறப்பாக நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கை நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தினால் அடிப்படை சான்றிதழ் பயிற்சிகளுக்கான வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
பண்ணிசை, பரதநாட்டியம், கதாப்பிரசங்கம் வயலின் ,வீணை, சொற்பொழிவு ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகளுக்கான வித்தியாரம்பம் விபுலானந்த அடிகளாரின் மணி மண்டபத்தில் அந்தந்த வளவாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
பெருந்திரளான மாணவர்கள் இக்கலைப் பயிற்சி வகுப்புகளில் பயில ஆர்வத்துடன் இணைந்ததைக் காணமுடிந்தது.
இறுதிப்பூசை நிகழ்வுகள் இந்து கலாசார உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :