கல்குடா சேலேஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியினர் ஏற்பாடு செய்த சீருடை அறிமுக போட்டி சனிக்கிழமை (29) ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில், சேலேஞ்சர்ஸ் அணியுடன் காவத்தமுனை அல் அஷார் அணி மோதிக் கொண்டன.
இப்போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய அல் அஷார் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்குடா சேலேஞ்சர்ஸ் அணியினர் 20 ஓவர்கள் முடிவின் போது 6 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டனர்.
இப் போட்டியின் வெற்றிக் கிண்ணம் வழங்கும் நிகழ்வு கல்குடா சேலேஞ்சர்ஸ் அணியின் தலைவர் கே.பீ. முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதில், அதிதிகளாக சட்டத்தரணி எம்.எம்.ராஷிக், ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.ஜீ.அமீர் கழக நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment