இஸ்லாமபாத் வித்தியாலயத்தில் மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்



எம்.ஐ.சம்சுதீன்-
லக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று செவ்வாய்க்கிழமை (04) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிஷாத் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தொழிலதிபரும் ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட சிரேஷ்ட ஆலோசகருமான றிஷாத் ஷரீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் எம்.இராமக்குட்டி, கல்முனைப் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கல்முனை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் விஷேட அதிதியாகவும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்து பொருட்டு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :