மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலிலும் சாதனை புரிந்த சாதனையாளர் களை கௌரவிக்கும் நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
வெற்றி மலர் வௌயீடு, மாவட்ட செயலக கீதம் அறிமுகம்,ஆகிய நிகழ்வுகள் மிகவும் விமர்சையாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.இந்நிகழ்வுகளில், பல்துறைசார் சர்வதேச, தேசிய ,மாகாண ,மாவட்ட , சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட், கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், இராஜங்க அமைச்சர்களான எஸ் வியாழேந்திரன், எஸ் சந்திரகாந்தன், மற்றும் கௌரவ அதிதிகள், விஷேட அதிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் அவசர வெளிநாட்டு பயணமொன்றின் காரணமாக கலந்து கொள்ளாத நிலையில் கௌரவ அமைச்சரின் வாழ்த்துச் செய்தியை இணைப்புச் செயலாளர் அ. அப்துல் நாசர் அவர்களினால் வாசிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :