உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுகள்



நூருல் ஹுதா உமர்-
லக சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் எஸ். சிவயோகராஜா மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.சர்ஜுன் ஆகியோரின் தலைமையில் சிறுவர்தின நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த ஜேர்மனியில் வாழும் சமூக சேவையாளரும் வர்த்தகருமான மாட்டின் ஜெயராஜ், கல்விக்கான கண்கள் அமைப்பின் ஸ்தாபகர் கனகலிங்கம் மகாலிங்கம், கமலேஸ்வரன், இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்து கொண்ட மாட்டின் ஜெயராஜ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் "சிறுவர்களே எமது எதிர்கால தலைவர்கள். அவர்கள் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்குரிய வளங்களை வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதே எங்களுடைய பிரதான நோக்கமாகும். இதற்காக எமது புலம்பெயர்ந்த வாழும் உறவுகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். தற்போது நாங்கள் இலங்கையில் உள்ள பல மாவட்டங்களிலும் முதலீடுகளைச் செய்துள்ளோம். இதன் உற்பத்திகளை ஐரோப்பிய சந்தைக்கு அனுப்புவதே பிரதான நோக்கமாகும்." மேலும் இங்குள்ள 98 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு வைனஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் விக்னேஸ்வரன் சிவபாதம் வழங்கியிருந்தார் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :