மாளிகைக்காடு சபீனா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், சாத்தியப்பிரமாண வைபகமும் !



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு கல்விக்கோட்ட மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் சாத்தியப்பிரமாணமும் இன்று திங்கட்கிழமை (10) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒழுக்காற்று பிரிவுக்கு பொறுப்பான ஏ.எம். இர்ஷாத் இந் நெறிப்படுத்தலில் மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கு சத்தியப்பிரமாணம் சிரேஷ்ட மாணவ தலைவர் எம்.எம். ஆஸில் அஹமட் செய்து வைக்க, பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்களினால் மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.

மாணவ தலைவர்களின் பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள், கல்வி மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளின் போது மாணவர்கள் நடந்துகொள்ளவேண்டிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பிலும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி இங்கு விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :