குவைத்தில் நடைபெற்ற 18ம் ஆண்டு மீலாது / ஸீரத்துன் நபி சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா!


குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 18ம் ஆண்டு ஐம்பெரும் விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்களின் தலைமையில் நவம்பர் 3, 2022 வியாழன் அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் 18ம் ஆண்டு ஸீரத்துன் நபி சிறப்பு மாநாடு நிகழ்ச்சியாக தொடங்கியது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 4, 2022) நண்பகல் 500வது வார ஜும்ஆ நிறைவு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இரவு நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை (நவம்பர் 5, 2022) நண்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் எஸ்.எஸ் ஹைதர் அலி மிஸ்பாஹி (முதல்வர், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி & தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி) மற்றும் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் முனைவர் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ M.A., M.Phil., Ph.D., (தலைமை இமாம், குராஸானி பீர் பள்ளிவாசல் & முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி, அடையார், சென்னை மற்றும் உறுப்பினர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமிழ்நாடு அரசு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

முனைவர் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ எழுதிய "இஸ்லாத்தின் வேர்களும் - விழுதுகளும்" நூல் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ அவர்களுக்கு சொல் வேந்தர்’ மற்றும் எஸ்.எஸ் ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்களுக்கு ‘ஆன்மீகத் தென்றல்’ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் மகத்தான இஸ்லாமியப் பணிகளை மக்களுக்கு மாண்புடன் எடுத்துரைத்து மாசில்லா சேவையாற்றி வரும் ஆலிம்களின் பணிகளை பாராட்டி "முன்மாதிரி ஆலிம்" விருதுகளும் வழங்கப்பட்டன.

சனிக்கிழமை (நவம்பர் 5, 2022) அன்று கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் & அன்பளிப்புகள் வழங்குதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது.

அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அல் ஃபத்ஹ் மதரஸா ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஜ. ஜியாவுத்தீன் ஃபாஜில் பாகவீ மற்றும் ஹாஃபிழ் அ. அப்துல்லாஹ் ஆகியோர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் மற்றும் சங்கப் பாடகர் நீடுர் ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் இஸ்லாமிய பாடல்களை பாடினர். பொருளாளர் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களின் பிரார்த்தனைகளுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.

மூன்று நாட்கள் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஜம்ஜம் நீர், மதிய, இரவு உணவுகள், தேநீர், குடிநீர் மற்றும் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகளை சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களான www.youtube.com/Ktic12 மற்றும் www.facebook.com/q8tic ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.


 குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :