விபத்தில் சிக்கிய லொறியை மீட்டு வரும்போது மீண்டும் விபத்து!



எச்.எம்.எம்.பர்ஸான்-
விபத்தில் சிக்கிய லொறியை திருத்தம் செய்ய கொண்டு சென்ற போது அந்த லொறி இன்று (17) மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதான வீதியில் வைத்து லொறி ஒன்று நேற்று (16) குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

அவ் விபத்தில் சிக்கிய லொறியை இன்று (17) கெரேஜ் ஒன்றுக்கு கொண்டு செல்லும் போது லொறி நாவலடி - பிரதான வீதி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வாய்க்கால் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத நிலையில், லொறிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :