கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந் நிகழ்வின்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண ஊடகத்துறை விருதினையும், படைப்பாக்க புகைப்படக் கலைஞர் விருதினையும் இவர் பெற்றுக் கொண்டார். கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் இணைந்து சேவையாற்றி வரும் இவர் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருதினையும், கிழக்கு மாகாண இலக்கிய விழாவினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களிடையே நடத்தப்பட்ட படைப்பாக்கப் போட்டியில் கலந்து கொண்டு, புகைப்படக் கலைஞர் போட்டியில் முதலாமிடத்தினையும் இவர் பெற்றுக் கொண்டதனால் இதற்கான விருதும் மாகாண இலக்கிய விழாவின்போது இவருக்கு வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் ஆசிரியராக சேவையாற்றி வரும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிறை எப்.எம். வானொலி சேவையில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு அரச வானொலி விருதும் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment