வெளிநாட்டு வேலைவாய்ப்பை இலக்குவைத்து ஆரம்பமானது இலவச கொரிய மொழி பயிற்சிநெறி !



நூருல் ஹுதா உமர்-
ளைஞர் வலூவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் சம்மாந்துறை பிரதேச சபையினால் நடாத்தும் இலவச கொரிய மொழி பயிற்சி பாடநெறி அங்குராப்பண நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌசாட் அவர்களின் தலைமையில் அமீர் அலி பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முகம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.அஸ்பர், என்.கோவிந்தசாமி, ஏ.எம்.எம்.றியாஸ், எம்.எஸ்.சரீபா, கொரிய மொழி போதனாசிரியர் வை.வீ.எம்.நபாஸ், அமீர் அலி பொதுநூலக நூலகர் ஏ.ஆர்.எம்.இல்யாஸ், பிரதேச சபையின் கொரிய மொழி பயிற்சி நெறிக்கான இணைப்பாளர் ஐ.எல்.சப்றி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :