பிரித்தானியா கரோவ் கவுன்சிலின் கவுன்சிலரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்



நூருல் ஹுதா உமர்-
டுக்காமுனை அருள்நேசபுரத்தில் உள்ள கடுக்காமுனை வாணி வித்தியாலயம் மற்றும் கடுக்காமுனை பாலர் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக பிரித்தானியாவின் கரோவ் கவுன்சிலின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா, சிறப்பு அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார், இந்து அறநெறி அபிவிருத்தி மன்ற தலைவர் வை. ரவீந்திரன், லக்ஷ்மி நாராயணன் ஆலய தலைவர் வை.சந்திரமோகன், மேலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா பிரதி அதிபர் எஸ் சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இங்கு சாதனை புரிந்த மாணவர்களுக்கும் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :