குளிர்காயும் போது தீப்பற்றி வயோதிபப் பெண் மரணம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
டும் குளிர் காரணமாக தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர் தீப்பரவி உயிரிழந்துள்ள சம்பவமொன்று (22) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் சட்டி ஒன்றில் தேங்காய் மட்டைகளை கொண்டு தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த போது அப் பெண்ணின் உடலில் தீ பரவியுள்ளது.

இவ்வாறு தீ காயங்களுக்குள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :