பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றிய விசேஷமான சபை அமர்வு!



காரைதீவு நிருபர் சகா-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் மனைவிமார் பிள்ளைகள் குடும்பத்தினர் முதன் முதலில் பங்குபற்றிய அமர்வு காரைதீவு பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் (14) இடம்பெற்றது

காரைதீவு பிரதேச சபையின் 57 ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அச்சமயம் வழமைக்கு மாறாக , பல்கலைக்கழக மாணவர்களும், உறுப்பினர்களின் மனைவிமார் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

வரலாற்றில் இதுவரை இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதில்லை.

நேற்று முன் தினம்(14) இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விபச்சார விடுதி என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு தவிசாளர் கண்டனம் தெரிவித்து பேசினார்.

உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர், உறுப்பினர்களான இஸ்மாயில் ,பஸ்மீர், நேசராசா ,மோகனதாஸ், ஜெயராணி, சசிக்குமார், குமாரசிறி, றணீஸ் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ,காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை அகற்றப்பட வேண்டும் என்ற பிரேரணையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்துக்களை பரிமாறினார்கள்.

அவரவர் ஆசனங்களிலே புதிதாக பொருத்தப்பட்ட ஒலி வாங்கி மற்றும் பெயர்ப்பலகை சகிதம் உறுப்பினர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக, தவிசாளரின் விசேட விருந்துபசாரம் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :